A Dalit girl sexually harassed by a Headmaster in Vitalapuram, Tindivanam (Code: TN-VLP-2023-185, Date: 20-Apr-2023 )

Back to search

Case Title

Case primary details

Case posted by Social Awareness Society for Youths-SASY
Case code TN-VLP-2023-185
Case year 20-Apr-2023
Type of atrocity SC/ST (POA) Act
Whether the case is being followed in the court or not? No

Fact Finding

Fact finding date

Fact finding date Not recorded

Case Incident

Case Incident details

Case incident date 20-Apr-2023
Place Village: Not recorded
Taluka:Not recorded
District: Villupuram(DP)
State: Tamil Nadu
Police station Tindivanam
Complaint date 21-Apr-2023
FIR date 21-Apr-2023

Case brief

Case summary

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள விட்லாபுரம் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் மோகனா, அன்றாட விவசாயக் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் ஹரிதாஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 பெண் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 84 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒரு பெண் ஆசிரியர் மற்றும் ஒரு தலைமை ஆசிரியர் உட்பபட மொத்தம் 5  ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

மோகனாவின் இரண்டு மகள்களும் விட்லாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியல் பயின்று வருகிறார்கள்.  இதில் மூத்த மகள் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 9-ம் வகுப்பும், அடுத்த மகள் 6-ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10, 2023 அன்று அப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர், அவரது பிறந்த நாளுக்காக, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்பு  சாக்லெட்  கொடுத்துள்ளார்.  இந்த சாக்லெட்டை தலைமை ஆசிரியர் மாணவி சாந்தியின் உடலைத் தொட்டு, தடவி கட்டாயப்படுத்திக் கொடுத்துள்ளார்.  இச்சம்பவத்தை பற்றி வகுப்பு ஆசிரியர் ஹேமலதா-விடம் அம்மாணவி கூறியுள்ளார்.  அதற்கு அந்த பெண் ஆசிரியர், ‘’வீட்டில் யாரிடமும் சொல்ல கூடாது.. சொன்னால்.. உன்னைத்தான் திட்டுவார்கள், அடிப்பார்கள்” என்று கூறி  மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்து வந்ததால், அம்மாணவி, பள்ளியில் உள்ள அறிவியல் ஆசிரியரிடம் சொல்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அதனைப் பார்த்த தலைமை ஆசிரியர், கையில் பிரம்பினை எடுத்துக்கொண்டு, மாணவர்களை அடக்குவது போன்று, அடிப்பது போன்று பிரம்பினை ஆட்டி மிரட்டிக்கொண்டே வேகவேகமாக வந்துள்ளார். இதனைப் பார்த்த மாணவி அந்த ஆசிரியரிடம் எதுவும் சொல்லாமல் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 20.04.2023 அன்று பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே இருந்துள்ளார். பிற ஆசிரியர்கள் அனைவரும் 10-வகுப்பு தேர்வு கண்காணிப்பாளராக சென்றுள்ளனர். வருகைப் பதிவேட்டை கொடுக்க அலுவலகம் சென்ற மாணவி சாந்தியை மேற்படி தலைமை ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்து, தொல்லை கொடுத்துள்ளார். சற்றும் எதிர்பார்க்காத மாணவி சத்தம் போட்டுக் கத்தி, வெளியில் ஓடி வந்துள்ளார்.

மறுநாள் 21.04.2023 அன்று இச்சம்பவத்தை தனது சக தோழியிடம் சாந்தி கூறி அழுதுள்ளார்.  அவர் மூலமாக பெற்றோர் மற்றும் ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்து, அனைவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். தகவலறிந்த திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இரவு 7 மணியளவில், தலைமை ஆசிரியரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

அன்றே, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கு.எண்: 14/2023 u/s 342, 354A IPC r/w 9(t), 10 POCSO Act 2012, 3(1)(w)(i), 3(2)(va) SC/ST PoA Act 1989 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Total Visitors : 6678836
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar