A Social Activist Appukutti was brutally attacked and abused by caste name by Caste Hindus (Code: TN-TRU-2023-191, Date: 20-Jul-2023 )

Back to search

Case Title

Case primary details

Case posted by Social Awareness Society for Youths-SASY
Case code TN-TRU-2023-191
Case year 20-Jul-2023
Type of atrocity SC/ST (POA) Act
Whether the case is being followed in the court or not? No

Fact Finding

Fact finding date

Fact finding date Not recorded

Case Incident

Case Incident details

Case incident date 20-Jul-2023
Place Village: Not recorded
Taluka:Not recorded
District: Tiruppur(DP)
State: Tamil Nadu
Police station Perumanallur
Complaint date 20-Jul-2023
FIR date 24-Nov-2023

Case brief

Case summary

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு அருந்ததியர் காலனியை சார்ந்த அப்புகுட்டி, த/பெ காளியண்ணன், பட்டியல் சாதியான தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர், ஜெய்பீம் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் விற்பனை முகவராகவும், மேலும் சமூக செயல்பாட்டாளராக மக்கள் பணி செய்து வருகிறார், கடந்த 20.03.2023 அன்று பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொடாரம்பாளையம் காலனியில் வசிக்கும் சின்னச்சாமி அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர், அவரது பயன்பாட்டில் இருக்கும் வீட்டை இடிப்பதாக சின்னச்சாமி தகவல் கொடுத்ததால் அப்புகுட்டி சென்றுள்ளார்,  பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி.டி.சி வேலுச்சாமி மற்றும் சிலர் கனரக வாகனத்துடன் சின்னச்சாமியின் 50 ஆண்டுகால பயன்பாட்டில் இருந்த வீட்டை இடிப்பதற்கு தயாராக இருந்துள்ளார்கள்,  வீட்டை எதற்காக இடிக்கிறீர்கள் வீட்டை இடிப்பதற்கான உத்தரவை யாரிடம் பெற்று இருக்கிறீர்கள், அதற்கான ஆவணங்கள் இருந்தால் காட்டவும் என அப்புகுட்டி கேட்டுள்ளார், பதிலுக்கு வேலுச்சாமி  நான் தாண்ட இங்கே கலெக்டர், நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை என்றும், அதை கேட்க நீ யாருடா?   நீ என்ன தொழில் செய்கிறாய், எப்படி சம்பாதிக்கிறாய் எல்லாம் எனக்கு தெரியும் என பொது மக்கள் மத்தியில் அப்புகுட்டியை இழிவுபடுத்தி பேசியுள்ளார், எந்தவித ஆதாரமற்ற குற்றசாட்டுகளை சொல்லி இழிவு படுத்தி பேசியுள்ளார், இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டு இருக்கும்போது சிறிது நேரத்தில் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து குமார் என்ற காவலர் அங்கே  வந்து அப்புகுட்டியிடம் காவல் ஆய்வாளர் உங்களிடம் பேச வேண்டும் என சொல்கிறார், உடனே அப்புகுட்டியை காவல் நிலையம் சென்றுள்ளார், மாலை 4.00 மணிவரை காத்திருந்தும் காவல் ஆய்வாளர் அங்கே வரவில்லை, மாலை 6.00 மணிக்கு சம்பவ பகுதியில் ஆய்வாளர் இருப்பதாக தகவல் அப்புகுட்டி அங்கே சென்றுள்ளார், ஆய்வாளர் ஹேமலதா அவர்கள் நீதிமன்ற ஆணையை படிப்பதாக சொல்லி ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி தலைவர் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என படித்து காட்டிய பிறகு  எனவே அரசு பணியை தடுத்தால் வழக்கு பதிவு செய்வேன் என சொல்லிவிட்டு, ஊராட்சி தலைவரிடம் வருவாய் துறையிடம் உத்தரவு பெற்று ஆக்கரமிப்பை அகற்றி கொள்ளுங்கள் இப்போது அகற்ற வேண்டாம் என தெரிவித்ததின் அடிப்படையில் கலைந்து சென்று விட்டார்கள்.

  தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஒருவனை எதிர்த்து நம்மால் எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்திலும் கோபத்திலும் அப்புகுட்டி மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதாக சி.டி.சி வேலுச்சாமி பொய் புகார் அளித்து வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அடுத்த நாள் 21.07.2023 அன்று அதிகாரிகள் யாரையும் அழைக்காமல், வருவாய்துறையிடம் எந்த உத்தரவும் பெறாமல்  சி.டி.சி வேலுச்சாமி அடியாட்களுடன் சென்று சின்னச்சாமி வீட்டை இடித்துவிட்டு சென்றுள்ளார்கள்,  இது தொடர்பாக  22.07.2023 அன்று சின்னச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், காவல்துறையினர் புகாரை ஏற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்யமறுத்து விட்டார்கள். வழக்கு பதிவு செய்ய அப்புகுட்டி வற்புறுத்தி கேட்டபோது, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்கு உங்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளோம் என ஆய்வாளர் ஹேமலதா அவர்கள் தெரிவித்துள்ளார், பெருமாநல்லூர் FIR No:268/2023. IPC: U/S 294(b), 353. கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது, 20.07.2023 அன்று வேலுச்சாமி, பொதுமக்கள் மத்தியில் அப்புகுட்டியை இழிவாக பேசியதற்கான வீடியோ பதிவு ஆதாரத்துடன் 25.07.2023 அன்று நேரிலும் பதிவு தபால் மூலமாக புகார் அளித்துள்ளார், வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டார்கள்.

அப்புகுட்டி குடியிருக்கும் பகுதியை சார்ந்த ரங்கநாதன் த/பெ பழனி`  என்பவரது  பயன்பாட்டில் இருக்கும் வீட்டை 25.09.2023 அன்று ஊராட்சி துணைத் தலைவர் சி.டி.சி வேலுச்சாமி இடித்துள்ளார்கள், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான உத்தரவை காட்டுங்கள் என கேட்டுள்ளார், அதை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என சொல்லிவிட்டு அப்புகுட்டியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கிராம நிர்வாக அலுவலர் அம்சவேணி கொடுத்த பொய்ப் புகாரின் பேரில் அப்புகுட்டி மீதும் மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளார், (FIR No:388/2023 IPC U/s:143,341,353

Total Visitors : 6679005
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar