Total records:1269

A Dalit Man Ramesh was abused by caste name and brutally attacked by Caste Hindus

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 23, P.A.P குடியிருப்பில் வசித்து வரும் ரமேஷ் த/பெ பழனி தாழ்த்தப் பட்ட இந்து அருந்ததியர் சாதியை சார்ந்தவர், பரம்பிக் குளம் நீர் பாசன திட்டத்தில் நீர் வளத்துறையில் பாசன உதவியாளராக பணி செய்து வருகிறார்,


    01.08.2023 அன்று செவ்வாய்கிழமை சுமார் 10.30 மணியளவில் ரமேஷ் பணி செய்யும் அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணி செய்யும் திருமதி சாம்ளா என்பவரது கணவர் சதிஸ்குமார்  மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத 2 நபர்கள் ரமேஷ் வீட்டுக் கதவை தட்டி ரமேஷ் வெளியே வந்தவுடன் சாதியை சொல்லி இழிவாக திட்டி ரமேஷின் சகோதரி சுமதியின் நைட்டியை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து ரமேஷ் அவரது சகோதரி சுமதி, அம்மா ஆகியோர்களை கடுமையாக தாக்கி யுள்ளார்கள், கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்


    சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பவர்கள் ஓடி வந்து தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து காப்பாற்றி பல்லடம் அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்கள், சிகிச்சையில் இருந்தபோது பல்லடம் காவல்துறை அதிகாரி ரமேஷிடம் வாக்குமூலம் பெற்று  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 05.08.2023 அன்று வழக்கு பதிவு வழக்கு செய்துள்ளார்கள், பல்லடம் காவல் நிலைய குற்ற எண்: 860/2023, IPC U/C  294(b), 323, 324, 506(2). PHW-4, Sc/St PoA section 3(1)r, 3(1)S,3(2)va ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: 21-08-2023
  • Date of Case Upload: 18-01-2024


Files

1) Fact Finding Report 

A Social Activist Appukutti was brutally attacked and abused by caste name by Caste Hindus

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு அருந்ததியர் காலனியை சார்ந்த அப்புகுட்டி, த/பெ காளியண்ணன், பட்டியல் சாதியான தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர், ஜெய்பீம் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் விற்பனை முகவராகவும், மேலும் சமூக செயல்பாட்டாளராக மக்கள் பணி செய்து வருகிறார், கடந்த 20.03.2023 அன்று பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொடாரம்பாளையம் காலனியில் வசிக்கும் சின்னச்சாமி அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர், அவரது பயன்பாட்டில் இருக்கும் வீட்டை இடிப்பதாக சின்னச்சாமி தகவல் கொடுத்ததால் அப்புகுட்டி சென்றுள்ளார்,  பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி.டி.சி வேலுச்சாமி மற்றும் சிலர் கனரக வாகனத்துடன் சின்னச்சாமியின் 50 ஆண்டுகால பயன்பாட்டில் இருந்த வீட்டை இடிப்பதற்கு தயாராக இருந்துள்ளார்கள்,  வீட்டை எதற்காக இடிக்கிறீர்கள் வீட்டை இடிப்பதற்கான உத்தரவை யாரிடம் பெற்று இருக்கிறீர்கள், அதற்கான ஆவணங்கள் இருந்தால் காட்டவும் என அப்புகுட்டி கேட்டுள்ளார், பதிலுக்கு வேலுச்சாமி  நான் தாண்ட இங்கே கலெக்டர், நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை என்றும், அதை கேட்க நீ யாருடா?   நீ என்ன தொழில் செய்கிறாய், எப்படி சம்பாதிக்கிறாய் எல்லாம் எனக்கு தெரியும் என பொது மக்கள் மத்தியில் அப்புகுட்டியை இழிவுபடுத்தி பேசியுள்ளார், எந்தவித ஆதாரமற்ற குற்றசாட்டுகளை சொல்லி இழிவு படுத்தி பேசியுள்ளார், இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டு இருக்கும்போது சிறிது நேரத்தில் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து குமார் என்ற காவலர் அங்கே  வந்து அப்புகுட்டியிடம் காவல் ஆய்வாளர் உங்களிடம் பேச வேண்டும் என சொல்கிறார், உடனே அப்புகுட்டியை காவல் நிலையம் சென்றுள்ளார், மாலை 4.00 மணிவரை காத்திருந்தும் காவல் ஆய்வாளர் அங்கே வரவில்லை, மாலை 6.00 மணிக்கு சம்பவ பகுதியில் ஆய்வாளர் இருப்பதாக தகவல் அப்புகுட்டி அங்கே சென்றுள்ளார், ஆய்வாளர் ஹேமலதா அவர்கள் நீதிமன்ற ஆணையை படிப்பதாக சொல்லி ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி தலைவர் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என படித்து காட்டிய பிறகு  எனவே அரசு பணியை தடுத்தால் வழக்கு பதிவு செய்வேன் என சொல்லிவிட்டு, ஊராட்சி தலைவரிடம் வருவாய் துறையிடம் உத்தரவு பெற்று ஆக்கரமிப்பை அகற்றி கொள்ளுங்கள் இப்போது அகற்ற வேண்டாம் என தெரிவித்ததின் அடிப்படையில் கலைந்து சென்று விட்டார்கள்.


      தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஒருவனை எதிர்த்து நம்மால் எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்திலும் கோபத்திலும் அப்புகுட்டி மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதாக சி.டி.சி வேலுச்சாமி பொய் புகார் அளித்து வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அடுத்த நாள் 21.07.2023 அன்று அதிகாரிகள் யாரையும் அழைக்காமல், வருவாய்துறையிடம் எந்த உத்தரவும் பெறாமல்  சி.டி.சி வேலுச்சாமி அடியாட்களுடன் சென்று சின்னச்சாமி வீட்டை இடித்துவிட்டு சென்றுள்ளார்கள்,  இது தொடர்பாக  22.07.2023 அன்று சின்னச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், காவல்துறையினர் புகாரை ஏற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்யமறுத்து விட்டார்கள். வழக்கு பதிவு செய்ய அப்புகுட்டி வற்புறுத்தி கேட்டபோது, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்கு உங்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளோம் என ஆய்வாளர் ஹேமலதா அவர்கள் தெரிவித்துள்ளார், பெருமாநல்லூர் FIR No:268/2023. IPC: U/S 294(b), 353. கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது, 20.07.2023 அன்று வேலுச்சாமி, பொதுமக்கள் மத்தியில் அப்புகுட்டியை இழிவாக பேசியதற்கான வீடியோ பதிவு ஆதாரத்துடன் 25.07.2023 அன்று நேரிலும் பதிவு தபால் மூலமாக புகார் அளித்துள்ளார், வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டார்கள்.


    அப்புகுட்டி குடியிருக்கும் பகுதியை சார்ந்த ரங்கநாதன் த/பெ பழனி`  என்பவரது  பயன்பாட்டில் இருக்கும் வீட்டை 25.09.2023 அன்று ஊராட்சி துணைத் தலைவர் சி.டி.சி வேலுச்சாமி இடித்துள்ளார்கள், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான உத்தரவை காட்டுங்கள் என கேட்டுள்ளார், அதை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என சொல்லிவிட்டு அப்புகுட்டியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கிராம நிர்வாக அலுவலர் அம்சவேணி கொடுத்த பொய்ப் புகாரின் பேரில் அப்புகுட்டி மீதும் மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளார், (FIR No:388/2023 IPC U/s:143,341,353

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: Not recorded
  • Date of Case Upload: 18-01-2024


Files

1) FF Report 
2) FIR Copy 

A Dalit Woman was abused by caste name and sexually harassed by Caste Hindus

    எனது சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள மானூர் நான் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவள் நானும் எனது கணவருமான ராமசந்திரனும் (கவுண்டர்) செஞ்சி ரங்கபூபதி நர்சிங் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போதே அறிமுகமாக பழகினோம் பிறகு காதலித்தோம் எங்களின் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது கணவர் ராமச்சந்திரன் ஊரான முப்புளியில் எங்கள் வீட்டில் வசித்து வருகிறோம்.


    எனது கணவர் வேலைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார், நான் முப்புளியில் எனது கனவர் வீட்டில் உள்ளேன்.  எங்கள் ஊரில் கழிப்பரை வசதி கிடையாது.  எங்கள் வீட்டிற்கு பின் பக்கம் உள்ள காலி இடங்கலில் நிறைய மரங்களும், செடிகளுமாக மறைவாக இருக்கும் இடத்தில் கிராமத்திலுள்ள பல பெண்கள் திறந்த வெளிக் கழிவறையாக பயன்படுத்துவார்கள். இதனால், நானும் அவ்வப்போது அந்த காலியிடத்தில் சிறுநீர் கழிப்பேன்.


    இந்நிலையில்தான் கடந்த 20.12.2023 அன்று காலை நான் வீட்டிற்கு பின்பக்கம் சென்று சிறுநீர் கழித்துவிட்டு, வீட்டிற்குள் இருந்தேன் அப்போது கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரும், அவரது மனைவி சுகன்யா என்பவரும் என்வீட்டிற்கு வெளியில் நின்றபடி "ஏய். வெளிய வாடி வீட்டுக்குள்ள பூந்துகிட்டு என்னாடி செய்ற என்றார் என கூறி சத்தம் போடனர். நான் வீட்டிலிருந்து வெளியில் வந்து,"என்னாச்சு. ஏன் இப்படி பேசுறீங்க” என்றேன். அப்போது, மேற்படி சுகன்யா, "ஏண்டி பரத்தேவிடியா


    நாயே என்னோட வீட்டுக்கு பின்னாடி இருக்குற இடத்துல நீ ஏண்டி பாத்ரூம் போற நாயே" என்று கேட்டார்.  அதற்க்கு எல்லோரும் போறாங்க நானும் போறேன். அதுக்கு ஏங்க இப்பிடி பேசரிங்க' ன்னு சொன்னேன்.  உடனே சுகன்யா ஒரு தடவ சொன்னா உனக்குப் புரியாதா நாங்க ஊர்ப்பொம்பளங்க போற இடத்துல, பறச்சி உனக்கு என்ன வேல, கவுண்டன் சாதியில கட்டிக்கிட்டதால நீ ஊர்க்காரி ஆயிடுவியா" என்று திட்டிக்கொண்டே வந்து என் முடியைப் பிடித்து இழுத்தார்.  அப்போது அவரது கணவர் சந்தோஷ்குமார் என்னருகில் வந்து எனது நைட்டியைப் பிடித்து இழுத்து என்னைக் கீழே தள்ளினர்.  கீழே விழுந்த என்னை கணவன் மனைவி இருவரும் காலால் மிதித்தும் உதைத்தும் சித்திரவதை செய்து மேலும் சாதி சொல்லி இழிவு செய்து பேசினர், இந்தக் கொடுமையும் அவமானமும் தாங்காமல் பயத்தில் நான் வீட்டுக்குள்ளேயே இருந்தேன் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. அதன்பிறகு 2912.2023 அன்று மாலை சுமார் 4:30 மணியளவில் நான் வீட்டில் இருந்தபோது மேற்படி சந்தோஷ்குமார் மேலும் சில ஆண்களுடன் எனது வீட்டிற்கு வந்தார். ஏண்டி பறத் தேவிடியா சொன்னா கேட்க மாட்டியா அங்க எதுகுடி நீ பாத்ரூம் போற" என்று மிரட்டினார். ஊரில் வேறு மறைவான இடமோ பொதுக் கழிப்பறையோ இல்லாத காரணத்தால் பெண்கள் பலர் இதனை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். என்னைத் தாக்கிய சந்தோஷ்குமாரிடம் அது கூடுவாஞ்சிகாரருடைய இடம்தானே என்னை ஏன் போகக்கூடாது என்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர், "சொன்னா கேக்காம எதுத்தா பேசற பற நாயே என்று திட்டி அடிக்க வந்தார்.  


     மேலும், எங்கள்  வீட்டில்  வாடகைக்கு  இருப்பவர்களிடம்  இங்கிருந்து  காலி  செய்துக்  கொண்டு  போய்விடுங்கள்,  இவள  அடிச்சி தெரத்த போரோம், இங்கிருந்து  இவ  போகலன்ன  பெட்ரோல்  குண்டு  போட்டு காலி பண்ணிடுவோம்.  நீங்க  தேவையில்லாம  மாட்டிக்கிட்டு சாகாதீங்க என்று மிரட்டினார்கள்.  


     இது குறித்து வழக்கிறிஞர் முனியாண்டி அவர்களின் உதவியுடன் சம்பவதன்று மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.  ஆய்வாளர்   லட்சுமி  அவர்கள்  நீ தான்  ஊர்காரப்  பையனை  கல்யாணம் பண்ணிகிட்டு வந்துட்டியே அப்புறம் எப்படி SC-ல வருவ, SC/ST Act  எல்லாம் வழக்கு போட முடியாது உனக்கு இது பொருந்தாது என கூறி மறுத்து விட்டார்.  அதன்பிறகு  எஸ்.பி. டீ.எஸ்.பி ஆகியோருக்கு புகார் அனுப்பி SC/ST Act - ன் கீழ்  வழக்கு  பதிவு  செய்தனர்.  ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. 

  • Posted by: Social Awareness Society for Youths-SASY
  • Fact finding date: Not recorded
  • Date of Case Upload: 17-01-2024

Attack on Dalit faimly

    on dated 23.11.23 at approx: 6.30pm accused vinod and pardeep reached at victim house and attacked on Monu, when his mother Shimla devi triying to save him accused through a chair to vivtim. accused also broken their shop glass and Hukka.

  • Posted by: NDMJ-Haryana
  • Fact finding date: 02-12-2023
  • Date of Case Upload: 25-12-2023

School Children Cleaning man wall in Morarji Goarnament Resident school In karnataka Kolara District, Malur taluk

    Case details is not available
  • Posted by: National Dalit Movement For Justice - NDMJ Karnataka
  • Fact finding date: 17-12-2023
  • Date of Case Upload: 18-12-2023

Total Visitors : 6308841
© All rights Reserved - Atrocity Tracking and Monitoring System (ATM)
Website is Managed & Supported by Swadhikar